23 June 2025


பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ICC



பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்காததே இதற்குக் காரணமாகும்.

குறித்த  போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்கள் வீசத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கவும், அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இருந்து 5 போனஸ் புள்ளிகளைக் கழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

(crictimes.lk)