பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்காததே இதற்குக் காரணமாகும்.
குறித்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்கள் வீசத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கவும், அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இருந்து 5 போனஸ் புள்ளிகளைக் கழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
(crictimes.lk)