லங்கா T10 கிரிக்கட் போட்டியில் Galle Marvels அணியின் உரிமையாளரான இந்திய வீரர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் தனது அணியின் வீரரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் தொடர்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127ஆவது பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு தாம் இணங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர் மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும், அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்
(crictimes.lk)